கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை அதிமுக அரசு மேற்கொள்ளவில்லை: ஸ்டாலின்

கடல்நீரை,குடிநீராக்கும்,திட்டத்தை,அதிமுக,அரசு மேற்கொள்ளவில்லை,: ஸ்டாலின்சென்னை: கடல்நீரை குடிநீராக்க எந்த பணியையும் அதிமுக அரசு மேற்கொள்ளவில்லை என ஸ்டாலின் கூறினார்.
சென்னை அயனாவரத்தில் மக்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க., முடிந்த அளவிற்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர்பழனிசாமி விழாக்களில் மட்டுமே கலந்து கொள்கிறார். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தி.மு.க., கொண்டு வந்தது. அதிமுக எந்த பணியும் மேற்கொள்ளவில்லை. தி.மு.க., ஆட்சி காலத்தில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. என கூறினார்.

Comments