பாலியல் புகாரில் சிக்கிய சாமியார் குர்மீத் ராம் ரஹீம் கைது செய்யப்பட்டதின் காரணமாக அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் வெடித்துள்ள வன்முறை தொடர்பாக மோடி கண்டனம் தெரிவித்தார். அவரது உரையில், பண்டிகை காலத்தில் நடந்து வரும் வன்முறை வேதனை அளிக்கிறது. நம்பிக்கை என்ற பெயரில் நடத்தப்படும் வன்முறையை இந்த நாடு பொறுத்துக் கொள்ளாது. மக்கள் அனைவரும் சட்டத்தில் வழியில் நடக்க வேண்டும். எந்த காரணத்திற்காகவும் சட்டத்தை கையில் எடுப்பதையோ அல்லத சட்டத்தை மீறுவதையோ ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த வன்முறை சம்பவத்திற்கு காரணமாகவர்கள் யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும் அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். இந்தியா மகாத்மா காந்தியும், புத்தரும் அவதரித்த பூமி. இங்கு எந்த வடிவிலும் வன்முறை இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. வரும் பண்டிகைகளை சுத்தத்துடன் கொண்டாடுவோம். கேரளாவில் துவங்கி உள்ள ஓணம் பண்டிகை கொண்டாட்டம் அனைவரிடமும் உள்ள ஏற்ற தாழ்வுகளை களையட்டும்.சுற்றுப்புற பாதுகாப்பு விழிப்புணர்வுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 'ஸ்வச்தா கி சேவா' என்ற திட்டத்தை துவக்க உள்ளோம். நாட்டின் சுத்தத்தில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசி உள்ளார்.
Comments