அதில், இந்த மருத்துவமனையில் அளிக்கப்பட்ட அலட்சியமான சிகிச்சை காரணமாக கடந்த 8 மாதங்களில் 90 குழந்தைகள் பிறந்த உடனேயே பலியாகி உள்ளன. 2015 ல் இதே மருத்துவமனையில் ஒரே மாதத்தில் 150 பிரசவங்கள் நடந்துள்ளன. தற்போது ஒரு மாதத்திற்கு 350 பிரசவங்கள் நடக்கின்றன. 2016 மட்டும் 82 குழந்தைகள் உயிரிழந்துள்ளன என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அடுத்து கர்நாடக மனிதஉரிமை ஆணையத்தினர் மருத்துவமனையில் ஆய்வுக்கு சென்ற போது போதிய மின்சார வசதியும் மருத்துவமனையில் இல்லாதது தெரிய வந்துள்ளது.
Comments