சின்னம் பெற லஞ்சம் :
இரட்டை இலை சின்னம் யாருக்கும் என்பது குறித்து தேர்தல் கமிஷன் இன்று (ஏப்ரல் 17) விசாரணை நடத்த உள்ளது. இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது டில்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டில்லி குற்றப்பிரிவு போலீசார் தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டில்லியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தினகரனிடம் இருந்து பணம் பெற்றது தெரிய வந்துள்ளது. மேலும் இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக லஞ்சம் பெற்ற இடைத்தரகர் சுகேஷ் சந்திரா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Comments