டிராபிக் ராமசாமி வழக்கு இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க மத்திய அரசு சார்பில் குழு அமைக்க வேண்டும் என டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என டிராபிக் ராமசாமி தனது மனுவில் கோரியிருந்தார்.
மத்திய அரசு பதில் மனு அந்த வழக்கில் மத்திய அரசு இன்று பதில் மனுத் தாக்கல் செய்தது. அதில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளின் விபரங்களை மாநில அரசுதான் வழங்க முடியும்.
மாநில அரசுக்குதான் அதிகாரம் விசாரணைக் குழு அமைக்கவும் மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. விசாரணைக் குழு அமைக்க மாநில அரசுக்குதான் அதிகாரம் உள்ளது என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தியமில்லாத ஒன்று ஆகவே, வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது. தமிழக அரசு சசிகலா தரப்பின் கட்டுப்பாட்டிலேயே உள்ளதால் இந்த வழக்கில் மாநில அரசு குழு அமைக்கும் என்பது சாத்தியமில்லாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Comments