இந்நிலையில் மகேந்திரன் தனது வழக்கறிஞரை சந்தித்துவிட்டு வீடு
திரும்பியபோது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அவரை தாக்கிவிட்டு
அங்கிருந்து தப்பியோடிவிட்டது. இதில் மகேந்திரனின் முகத்தில் காயம்
ஏற்பட்டது. அவர் வடபழனி சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலைவா படம் பெரும் பிரச்சனைகளுக்கு பிறகு வெளியானதால் ஜில்லா எந்த
பிரச்சனையும் இன்றி வெளியாக வேண்டும் என்று விஜய் நினைக்கிறார்.
இந்நிலையில் தான் ஜில்லாவுக்கு சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
Comments