டில்லியில் ஆட்சியமைத்து உள்ள ஆம் ஆத்மி கட்சி, அடுத்ததாக லோக்சபா தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளது.
பிரசாரம் துவக்கம் : இதற்காக, இம்மாதம், 12ம் தேதி முதல், அமேதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துவங்கப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க, அக்கட்சி யினர் புதிய நடைமுறைகளை கையாளத் துவங்கி உள்ளனர். அவ்வகையில், எஸ்.எம்.எஸ்., இ-மெயில் மூலமாகவும் உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக, விசேஷ மொபைல் எண்கள், இ-மெயில் முகவரிகள் கொடுக்கப்பட்டு உள்ளன. கட்சியில் சேர விரும்பும் நபர்கள், மொபைல் எண்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பியும், இ-மெயில் செய்தும் தங்களை உறுப்பினர்கள் ஆக்கிக் கொள்ளலாம் என, ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
50 ஆயிரம் பேர் சேர்ப்பு : இதுவரை, 50 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப் பட்டுள்ளதாகவும், 26ம் தேதிக்குள், 1 லட்சம் உறுப்பினர் களை சேர்க்க திட்டமிட்டுள்ளதா கவும், ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரான, ஹரிகேஷ் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
Comments