இன்று முறைப்படி பாஜகவில் சேரும் எதியூரப்பா

இன்று முறைப்படி பாஜகவில் சேரும் எதியூரப்பாபெங்களூர்: தனது கர்நாடக ஜனதா கட்சியை பாஜகவுடன் இணைத்த ஒரு வாரம் கழித்து கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா இன்று பாஜகவில் முறைப்படி சேர்கிறார். பாஜகவில் இருந்த எதியூரப்பா தனக்கு கட்சியில் முக்கியத்துவம் இல்லை என்று கூறி கடந்த 2012ம் ஆண்டில் கட்சியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து அவர் கர்நாடக ஜனதா கட்சியை துவங்கினார்.

தங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவித்த பிறகு பாஜக எதியூரப்பாவை அணுகியது. இம்முறை நடந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்ற பிறகு எதியூரப்பா தனது கட்சியை கடந்த வாரம் பாஜகவுடன் இணைத்தார். இதையடுத்து அவர் கட்சியில் முறைப்படி இணைய ஒரு தேதியை முடிவு செய்யுமாறு அவருக்கு பாஜக கோரிக்கை விடுத்தது. அதன்படி அவர் இன்று பாஜகவில் தன்னை முறைப்படி இணைத்துக் கொள்கிறார். அவர் பாஜகவில் மாண்டும் இணைந்தாலும் வரும் லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிட மாட்டார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Comments