அண்டை நாடான சீனாவுடன், 1962ம் ஆண்டு நடந்த போரில், இந்தியா தோல்வி அடைந்தது. அந்தப் போரில் இந்தியா, நிறைய இடங்களை சீனாவிடம் பறிகொடுத்தது. சீனப் போரின், 50வது நினைவு தினம்,
முன்னதாக, போர் வீரர் நினைவிடமான, "அமர் ஜவான் ஜோதி'யில், மலர் வளையம் வைத்து வணங்கிய அமைச்சர் அந்தோணி, பின், நிருபர்களிடம் கூறியதாவது:இப்போது இருப்பது போல, இந்தியா, 50 ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கவில்லை. தொடர்ந்து வந்த பல அரசுகள், ராணுவத்தை பலம் வாய்ந்ததாக ஆக்கியதால், எந்த அச்சுறுத்தலையும் சமாளிக்கும் வகையில், ராணுவம் இப்போது விளங்குகிறது.
சீனா - இந்தியா இடையே, மீண்டும் ஒரு போர் ஏற்படாது. இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னைகள், பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும். எவ்வித மிரட்டலையும் சமாளித்து, எல்லையை நம் வீரர்கள் பாதுகாப்பர். அதே நேரத்தில், ராணுவமும் பலம் வாய்ந்ததாக மாற்றப்படும். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்னைகள், பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும்.இவ்வாறு, அமைச்சர் அந்தோணி பேசினார்.
Comments