புதிதாக
கண்டுபிடிக்கப்பட்டுள்ள புர்கடோரியஸ் என்ற பாசில் மூலம் இது தெரிய
வந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த பாசிலில் உள்ள உருவம்தான்
உலகின் மிகப் பழமையான, மிகவும் ஆரம்ப கால மனித உயிரின் முதல் படி என்று
அவர்கள் கூறுகிறார்கள். இந்த உருவம் அணிலைப் போல இருப்பதாகவும், இதுதான்
மனிதனின் ஆரம்ப கால உருவமாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள்
தெரிவிக்கிறார்கள்.
இந்த ஆரம்ப கால மனித உருவமானது பெரும்பாலும்
மரங்களிலேயே வசித்து வந்ததாகவும், பழங்களைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து
வந்ததாகவும் தெரிவிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இதற்கு முன்பு
புர்கடோரியஸின் பல் மட்டுமே சிக்கியிருந்தது. தற்போதுதான் அதன் எலும்புக்
கூட சிக்கியுள்ளது. ஏல் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழுதான் இந்த ஆய்வை
நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.
இந்த அணில் வகை உயிரினமானது தனது
கால்களை எல்லாப் பக்கமும் திருப்பும் வகையில் இருந்துள்ளது. மேலும் அதன்
கால் எலும்பு மூட்டுகளும் மனிதர்களுக்கு இருப்பதைப் போலவே இருப்பதாகவும்
ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த அணில் போன்ற உயிரினம்தான் பின்னாளில்
மனித உருவமாக மாறியிருக்கலாம் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த
புர்கடோரியஸ் இனமானது, டைனோசர்கள் அழிந்த சில காலத்திற்குப் பின்னர்
வாழ்ந்துள்ளது. அதாவது பாலியோசீன் காலத்தில் இது வாழ்ந்துள்ளது.
பாலூட்டியான இந்த அணில் உருவ உயிரினம், மிகவும் சிறியதாக இருந்துள்ளது.
பழுப்பு நிறத்தில் இருந்துள்ளது. நல்ல அடர்த்தியான வாலும் இதற்கு
இருந்துள்ளது. இதன் மொத்த எடையானது 1.3 அவுன்ஸ்தான். நல்ல பெரிய பற்கள்
இதற்கு இருந்துள்ளது.
மனிதனின் பூர்வீகம் குறித்து இன்னும் என்னவெல்லாம் வரப் போகிறதோ...!
Comments