பிரேமானந்தா மருத்துவமனையில் அனுமதி!

கடலூர்: சிறையில் உள்ள பிரேமானந்தாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தா சாமியாருக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதனையடுத்து அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதித்தனர் போலீசார்.

முன்னதாக, பரோலில் கடந்த 3 மாதமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த பிரேமானந்தா, நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து மூச்சு திணறல் ஏற்பட்டதால் இன்று அவருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Comments