
எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அதிமுக கொறடா உத்தரவை மீறி ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் ஓட்டுப் போட்டனர். எனவே, இவர்களை தகுதி நீக்கம் செய்ய உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது.
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சட்டசபை சபாநாயகர் முடிவு செய்வார் என உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14ம் தேதி உத்தரவிட்டது. ஆனால், மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும், சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. உச்சநீதிமன்றம் வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும் வரையிலோ அல்லது சபாநாயகர் முடிவெடுக்கும் வரையிலோ அந்த 11 எம்எல்ஏக்களும் சட்டசபையில் நுழைய தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தது.
இந்த வழக்கு, வரும் செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழக்கை விசாரிக்க உள்ளது.
Comments