
இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் 21 பேரை பலி கொண்டிருக்கிறது கொரோனா. மொத்தம் 423 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
மகாராஷ்டிராவை தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் 309 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கொரோனாவுக்கு தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து டெல்லியில் 3-வது இடமாக அதிக பாதிப்பு உள்ளது. டெல்லியில் 293 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 4 பேர் பலியாகி உள்ளனர். கேரளாவில் 286 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் 154 பேர் பாதிக்கப்ப்ட்டுள்ளனர். தெலுங்கானாவிலும் 154 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் 161 பேரும் உத்தரப்பிரதேசத்தில் 128 பேரும் கர்நாடகாவில் 124 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மத்திய பிரதேசத்தில் 107 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 8 பேர் மரணமடைந்துள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ள குஜராத் மாநிலத்தில் 88 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் 6 பேரும் ஜம்மு காஷ்மீரில் 2 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 70 பேரும் மேற்கு வங்கத்தில் 53 பேரும் ஹரியானாவில் 49 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 5 பேரை பலி கொண்ட பஞ்சாப்பில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பீகாரில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இமாச்சல பிரதேசத்திலும் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Comments