குடியுரிமை சட்டம்- மவுனம் கலைத்தார் ரஜினி- வன்முறைகள் வேதனை தருவதாக ட்வீட்!

I am pained at CAA Violences, says Rajinikanth சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களில் நடக்கும் வன்முறைகள் தம் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளதாவது: எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இவ்வாறு ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.

Comments