குடியுரிமை சட்டம்: பேரணியில் மம்தா.. சத்தியாகிரகத்தில் பினராயி.. மாஸ் காட்டும் இரு மாநில முதல்வர்கள்


அவர்களது செயல்திட்டத்தை அமல்படுத்த முயற்சிக்கிறார்கள். நாட்டில் தற்போதைய சூழல் மிகவும் கொந்தளிப்பாக உள்ளது. குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கேரளாவும் துணை நிற்கிறது என்றார். அது போல் மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்.
குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் கொல்கத்தாவில் இன்று முதல்வர் மம்தா தலைமையிலான பேரணியில் பல்லாயிரக்கணக்கான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.
அவர்கள் மத்திய அரசு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறு கொல்கத்தா நகரின் முக்கிய சாலைகள் வழியாக நடந்துச் சென்றனர். குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் இன்னும் பல மாநிலங்களின் முதல்வர்களும் இது போன்று போராட்டம் நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments