பாலில் நச்சுத்தன்மை: தமிழகம் முன்னிலை

பால், நச்சுத்தன்மை, தமிழகம், திமுக, தி.மு.க., சுகாதார அமைச்சர், அஸ்வினி குமார் சவுபே,
புதுடில்லி: தமிழகத்தில் விநியோகம் செய்யப்படும் பாலில் நச்சுத்தன்மை அதிகம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
திமுக எம்.பி., டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே அளித்த பதில்: தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட நச்சுத்தன்மை அதிகம் உள்ளது. தமிழகம், கேரளா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாலில் அப்ளாடோக்சின் எம்1 என்ற நச்சு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருக்கிறது.

நச்சுத்தன்மை அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இதற்கு, அடுத்த இடங்களில் டில்லி, கேரளா மாநிலங்கள் உள்ளன. தமிழகத்தில் 551 பால் மாதிரிகள் பரிசோதனை செய்ததில் 88 பால் மாதிரிகளில் நச்சுத்தன்மை அதிகம் இருந்தது, உணவு கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வில் தெரிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments