உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பின்படி சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட தடை இல்லை

பெண்கள் அனுமதி டெல்லி : சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்து வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட மறு சீராய்வு மனுக்கள் 5 நீதிபதிகள் பெஞ்ச்சில் இருந்து 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் பெஞ்ச்சில் நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

புதிய தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச்சில் நீதிபதிகள் கன்வில்கர், இந்து மல்கோத்ராவும் இடம்பெறுவர்.

உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பின்படி தற்போது சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட தடை இல்லை.

Comments