
இதனால், சிவசேனா, பாஜக இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ள இந்த அரசியல் நிகழ்வு குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்து தங்கள் நிலைப்பாட்டை விளக்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படியே இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது உத்தவ் தாக்கரே பேசும்போது, பாஜகமீது கடுமையான குற்றச்சாட்டுகளை பகிரங்கமாகவே முன் வைத்தார். அவர் சொன்னதாவது: "கட்சிகளை உடைத்து ஆட்சியில் நீடிக்க பாஜக முயற்சி செய்கிறது மகாராஷ்டிராவில் ஜனநாயகத்தின் மீது நடந்த சர்ஜிக்கில் ஸ்டிரைக் இது. ஜனநாயகத்தின் மீதான தாக்குதலுக்கு மகாராஷ்டிர மக்கள் நிச்சயம் பழிதீர்ப்பார்கள். மகாராஷ்டிராவில் அரசியலமைப்பு கேலிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மக்கள் முன்னிலையிலேயே சிவசேனை அனைத்து முயற்சிகளையும் எடுத்தது.
மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைக்க பாஜக எல்லா விதிகளையும் மீறியுள்ளது. ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி விட்டது பாஜக. ஹரியானா, பீகாரிலும் இதேபோலதான் அது செய்தது. தேர்தலே தேவையில்லை என்ற நிலையை உருவாக்கி வருகிறது பாஜக.
பதவி நாற்காலி மீது பெவிகால் தடவி அப்படியே அதிலேயே ஒட்டி இருந்து கொள்ளுங்கள். மக்கள் அளித்த தீர்ப்புக்கும், அரசியல் சாசனத்திற்கும் மிகப் பெரிய அவமரியாதையை தேடிக் கொடுத்து விட்டார் அஜீத் பவார். ஜனநாயகம் என்ற பெயரில் நடந்துள்ள இந்த விளையாட்டு கேலிக் கூத்தாகும்.
எல்லாவற்றையும் இரவோடு இரவாகவே செய்கிறது. ஒரு தனி மனித ஆதிக்கம் என்பது தவறானது. இதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும். சுயநல எண்ணம் கொண்டவர்கள். ஆனால் மக்கள் சட்டத்தை கையில் எடுக்க கூடாது. சட்டப்படி எல்லாமே நடக்கட்டும். அதுவரை அனைவரும் அமைதி காக்க வேண்டும். பாஜக சிவசேனாவை உடைத்தால் அதை சிவசேனா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அதைப் பார்த்து தூங்கிக் கொண்டிருக்க மாட்டோம்" என்றார்.
Comments