
இந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனை சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் தமது சமூக வலைதள பக்கங்களில், கூடங்குளத்தில் அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது அரசியல் நோக்கத்தோடு போடப்பட்ட வழக்குகளை அரசு இன்னும் திரும்பப் பெறவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.
நிலுவையில் உள்ள வழக்குகள் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது. இந்த வழக்குகள் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
Comments