
இந்த வழக்கில் நாளை பின் வரும் விஷயங்கள் நடக்க போகிறது, நாளை காலை 10.30 மணிக்கு இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படுமென்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி கவர்னர் எடுத்த முடிவு சரியா என்று உச்ச நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கும். மேலும் அவர் 1 வாரம் கால அவகாசம் கொடுத்தது சரியா. கால அவகாசத்தை குறைக்க வேண்டுமா என்று தீர்ப்பு அளிக்கும்.
எந்த அடிப்படையில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நீக்கப்பட்டது. பொதுவாக குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்க, கொண்டு வர வேண்டும் என்றால் மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்க வேண்டும். ஆனால் நேற்றோ, நேற்று முதல் நாளோ அப்படி எந்த விதமான கூட்டமும் நடக்கவில்லை.
இது தொடர்பாக முதல்வர் பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் . கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்த கடிதத்தை அவர் சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல் ஆட்சி அமைக்க உரிமை கோரிய கடிதத்தையும் இவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இரண்டும்தான் இதில் முக்கியம்.
இந்த கடிதங்கள் இந்த வழக்கின் போக்கை மாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது . இது தொடர்டைய மற்ற ஆதாரங்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகள் சமர்ப்பிக்கும். இந்த நிலையில் இந்த ஆதாரங்களை விசாரித்துவிட்டு, அதன் மீதான உத்தரவை உச்ச நீதிமன்றம் நாளை பிறப்பிக்கும்.
Comments