வங்கி மோசடி: 169 இடத்தில் சிபிஐ சோதனை

CBI, BankFraud, Raid, சிபிஐ, வங்கி மோசடி, ரெய்டு, சோதனைபுதுடில்லி: வங்கி மோசடி தொடர்பாக தமிழகம், கேரளா உட்பட 15 மாநிலங்களில் உள்ள 169 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ரூ. 7 ஆயிரம் கோடி மதிப்பில் வங்கி மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ தரப்பில் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த வழக்குகளுக்கு தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தமிழகம், கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 169 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனையில் இறங்கியுள்ளனர்.

Comments