
இம்மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17-ந் தேதி ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து தாம் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக இவ்வழக்கில் அவர் தீர்ப்பு வழங்க உள்ளார். இத்தீர்ப்பு வழங்கப்படுவதால் உத்தப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கைகள் குறித்து அம்மாநில தலைமை செயலாளருடன் இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆலோசனை நடத்துகிறார்.
அயோத்தி வழக்கில் நவம்பர் 13 அல்லது 15-ந் தேதிக்குள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் வழக்கு, சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் வழக்கு ஆகியவற்றிலும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தாம் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக தீர்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தம் வசமுள்ள முக்கியமான வழக்குகளை அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் எஸ்.ஏ. போப்டேவிடம் தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று ஒப்படைத்திருக்கிறார்.
Comments