
சீன அதிபர் ஜி ஜிங்பின் வருகைக்காக சென்னையில் தோட்டக்கலைத் துறை சார்பாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பெரிய அளவில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு, மேடை இருக்கும் பகுதி வரை காய்கறிகளை வைத்து அலங்காரம் செய்து இருக்கிறார்கள். தமிழக அரசு சார்பாக பிரம்மாண்டமாக காய்கறி மூலம் இந்த அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று முதல்நாள் வந்த காய்கறிகள் மொத்தமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. 3 டன் காய்கறிகள் கொண்டு தோட்டக்கலைத் துறை அலங்காரம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல வகையான காய்கறிகள் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமின்றி தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இருந்து இதற்காக காய்கறிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தின் சிறப்பை உணர்த்தும் வகையில், ஒவ்வொரு பகுதியில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. வாழை தோரணம் தமிழக பாரம்பரியத்தின் படி நிற்கவைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி சீனா சென்ற போது அங்கு இதேபோல் காய்கறிகள் வைத்து அலங்காரம் செய்யப்பட்டது. சீனாவின் இந்த வரவேற்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு கைமாறாக தற்போது தமிழக அரசு இப்படி செய்துள்ளது.
அட இயற்கையாக அலங்காரம் செய்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவில்லையே என்று கூறி இதற்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல், உணவு பொருட்களை ஏன் இப்படி வீணடிக்கிறார்கள் என்று கூறி இதற்கு எதிராகவும் பலர் டிவிட் செய்துள்ளனர்.
Comments