
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது , ப சிதம்பரம் கைதுக்கு கண்டனம் தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில் சிபிஐ அதிகாரிகள் வீட்டின் சுவர் ஏறி குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்தது நாட்டிற்கே அவமானம் ஆகும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது சுமார் 20 முறைக்கு மேல் சிபிஐ அதிகாரிகள் கூப்பிட்டபோதெல்லாம் ப சிதம்பரம் நேரில் ஆஜராகி விளக்கமளித்து இருக்கிறார். ப சிதம்பரம் கைது செய்யப்பட்டு இருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர். அவரது விமர்சனத்திற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது" இவ்வாறு கூறினார்.
Comments