
ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி இவர்களை அந்தக் கும்பல் தாக்கியது. தாக்குதல் நடத்திய கும்பலில் இருந்தவர்களுக்கு 20 முதல் 30 வயதுக்குள் இருக்கும். வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று கூறியுள்ளார். ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்த மாவட்ட எஸ்பி லீனா பாட்டீல் கூறுகையில், புகார்தாரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளோம். சம்பவ இடத்திலிருந்து கிடைத்த சிசிடிவி பதிவுகளைப் பார்த்தபோது அப்படி எந்த சம்பவமும் நடந்தது போலத் தெரியவில்லை. இரு தரப்புக்கும் இடையே இருந்த பழைய முன்பகை காரணமாக தாக்குதல் நடந்திருப்பதாக தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்ட 6 பேரைக் கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இரு தரப்புக்கும் இடையே நடந்த பைக் ரேஸின்போதுதான் பிரச்சினை உருவானதாக தெரிகிறது. விசாரணை முடிவில் அனைத்தும் தெரிய வரும் என்றார்.
Comments