இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

சுப்ரீம் கோர்ட், இடஒதுக்கீட்டு சட்டம், மத்திய அரசுபுதுடில்லி : மத்திய அரசு கொண்டு வந்துள்ள இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் சமீபத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசு பணிகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் வரும் பிப்ரவரி 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், இந்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.

மேலும், இடஒதுக்கீட்டு சட்டம் தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு நோடீஸ் அனுப்பி உள்ளது. இந்த பதிலை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments