2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகம், சென்னை வானிலை, பாலசந்திரன், மழைசென்னை: வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், தென்றேகு பருவமழையின் முதல் இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் இயல்பை ஒட்டி மழை பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 3 வரை தமிழகம், புதுச்சேரியில் பதிவான மழை அளவு 112 மி.மீ., இயல்பான அளவு 121 மி.மீ.,மலை பகுதிகள் அடங்கிய கோவை, தேனி, நெல்லை மாவட்டங்களில் இயல்புக்கு அதிகமாக 50 சதவீதத்திற்கு மேல் மழை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது. அதிகமாக மதுரையில் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனாலும், வெப்பசலம் காரணமாகவும் 2 நாட்களுக்கு தமிழகம் புதுவை ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments