பேஸ்புக்கில் அதிகரிக்கும் வன்முறை கருத்துக்கள்

பேஸ்புக், வன்முறை கருத்துக்கள். நியூயார்க் : பேஸ் புக்கில் பதிவிடப்பட்டுள்ள வன்முறை தொடர்பான பதிவுகளுக்கு பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டில் சுமார் 12 லட்சம் ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வன்முறைப் பதிவுகள் தொடர்பான எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால் தாமாகவே பல பதிவுகளை நீக்கிவிட்ட பேஸ்புக் நிறுவனம் வன்முறையைத் தூண்டும் இதர பதிவுகள் தொடர்பாக முன் எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது. சிரியா யுத்தம் போன்ற காரணங்களுக்காக இதுபோன்ற வன்முறைக் காட்சிகளின் பதிவும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments