நஜீப் பிரதமராக இருந்த போது அவரால் நியமிக்கப்பட்ட பொது நிதியத்துக்காக வந்த பல பில்லியன் டாலர்கள் கணக்கில் வரவில்லை என்றும், 700 மில்லியன் டாலர்களை நஜீப் எடுத்துக் கொண்டதாக எதிர் கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால் இதனை நஜீப் மறுத்து வந்தார். அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார கொள்கை மீதான அதிருப்தியால் அந்த கட்சி, மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது.அதனை தொடர்ந்து மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானார் மகாதிர் முகம்மது.இந்த நிலையில் மாஜி பிரதமர் நஜீப் ரசாக்குக்கு சொந்தமான இடங்களில் பிரதமர் மகாதிர் முகம்மது சோதனையிட உத்தரவிட்டார். சோதனையில் நஜீம் வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதுகுறித்து மலேசிய போலீஸார் கூறும்போது, "ஆடம்பர பைகள் அடங்கிய 284 பெட்டிகள் கைப்பற்றப்பட்டன. நகைகள் அடங்கிய 72 பைகள் மற்றும் ஏராளமான ஆடம்பர பொருட்கள் கைப்பற்றப்பட்டன" என்றார். ஊழல் விசாரணை முடியும் வரை நாட்டை விட்டு வெளியேற நஜீப் ரசாக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Comments