எடியூரப்பா பதவியேற்க தடைவிதிக்க வேண்டி காங். தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்பு

Congress,காங்கிரஸ்,காங்.,மனு,இரவே,விசாரிக்கப்படுமா?புதுடில்லி : எடியூரப்பா பதவியேற்புக்கு எதிராக காங்., அளித்த மனுவை இரவே விசாரிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆலோசனை நடத்தினார்.

கர்நாடகாவில் பா..ஜ.வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங். மனு செய்தது. இரவே அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் காங்., வலியுறுத்தியுள்ளது. 

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வீட்டிற்கு, பதிவாளர் ரவீந்திரா மைத்தானி நேரில் சென்று ஆலோசனை நடத்தினார். அதன்படி, இந்த வழக்கை நள்ளிரவு 1:45-க்கு விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதி அறிவித்து இருக்கிறார்.

Comments