முன்னதாக அவர் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: 50 ஆண்டு பொது வாழ்வில் நிறைவேறாத ஆசை ஏதும் இல்லை. திராவிட கொள்கை பிரசாரமே என் பிறந்த நாள் பரிசு. மத்திய, மாநில அரசுகளை அகற்ற அனைவரும் ஜாதி, மத, கட்சி பாகுபாடின்றி ஒன்று சேர வேண்டும். மக்களிடம் சுயமரியாதை, சமூக நீதி,இனம் மொழி, உணர்வு மேலோங்க திமுகவினர் பாடுபட வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் திமுகவினர் படிப்பகங்களை துவக்கி அண்ணாத்துரை,ஈ.வே.ரா., கருணாநிதி, அன்பழகன் ஆகியோரது பெயர்களை சூட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கமல் வாழ்த்து
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் வெளியிட்ட வாழ்த்து செய்தி: அன்புச் சகோதரர் , திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எனது உளமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Comments