குரங்கணி காட்டுத்தீ : காயமடைந்தவர்களிடம் நீதிபதி வாக்குமூலம்

குரங்கணி, காட்டுத்தீ, காயம், வாக்குமூலம்மதுரை : தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய காயமடைந்தவர்களில் 4 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும், 5 பேர் தேனி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காட்டுத்தீயில் சிக்கி மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மதுரை அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் மகளிர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி சரண்யா வாக்குமூலம் பெற்றுள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் தீயில் சிக்கிய 10 பேரை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதால், மீட்புப் பணிகளை கண்காணிக்க 5 ஐஏஎஸ் அதிகாரிகள் தேனி விரைந்துள்ளனர்.

Comments