கோவையில் உள்ள பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் பணி நியமனத்திற்கு சுரேஷ் என்பவரிடம் ரூ.30 லட்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து பல்கலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். துணைவேந்தர் அலுவலகத்திலும் சோதனை நடந்தது. தொடர்ந்து, ரூ.1 லட்சத்தை ரொக்கமாகவும், ரூ.29 லட்சத்தை காசோலையாகவும் வாங்கிய போது, கணபதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. கணபதி வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
Comments