சி.பி.ஐ.விசாரணைக்கு ஒத்துழைக்க நிரவ் மோடி மறுப்பு

 சி.பி.ஐ.விசாரணைக்கு ஒத்துழைக்க நிரவ் மோடி மறுப்புபுதுடில்லி: வங்கி கடனை இப்போதைக்கு திருப்பி செலுத்த இயலாது என நிரவ் மோடி கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

ரூ. 11 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் வைர நகை வியாபாரி நிரவ் மோடி மீது சி.பி.ஐ. , அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. வெளிநாடு தப்பியோடிவிட்டார். இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு நிரவ் மோடி எழுதியுள்ள கடிதம் வருமாறு:எனது வியாபாரம் முடங்கிவிட்டதால் இப்போதைக்கு பணத்தை திருப்பி தர முடியாது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று பல நாடுகளில் வேலை உள்ளதால் இந்தியா திரும்ப முடியாது சி.பி.ஐ. விசாரணைக்கு தாம் ஒத்துழைக்க முடியாது எனவும் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments