பொங்கல், மகரஜோதியையொட்டி நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை, எழும்பூர்- கொச்சுவேலி இடையே முன்பதிவற்ற ரயில் இன்று இரவு இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, இரவு 11.45 மணிக்கு எழும்பூரிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை வழியாக கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. நாளை மாலை 3.40 மணிக்கு ரயில் கொச்சுவேலி சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments