ப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை : சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சி.பி.ஐ., அதிகாரிகளும் அப்போது உடன் இருந்தனர். காலை 7.30 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமாக டில்லியில் உள்ள வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனை ஏன்

இந்த சோதனை தொடர்பாக கார்த்தி தரப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் கூறியதாவது: ஏர்செல் மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சோதனை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 5 அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. எந்த ஆவணமும் கொண்டு செல்லப்படவில்லை. விசாரணைக்கு நேரில் ஆஜராக கார்த்தி சிதம்பரத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. அவரது பிரதிநிதி சார்பில் ஆஜராக தான் கூறினர். கார்த்தி பிரதிநிதியும் டில்லியில் ஆஜரானார். அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் மாற்றி மாற்றி சோதனை நடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினர்.

Comments