
இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், கூறியதாவது: சேகர் ரெட்டி டைரியில் குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சர்கள் மீது நடவடிக்கை தேவை. டைரியில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த விவகாரம் பற்ரி சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சேகர் ரெட்டியுடன் தமிழக அமைச்சர்களுக்கு உள்ள தொடர்பு தற்போது ஆதாரபூர்வமாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு தமிழக ஆளுநர் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்குற்றச்சாட்டு பொய் என்றால் அமைச்சர்கள் டிவி சேனல் மீதுதான் வழக்கு தொடர வேண்டும் என்று தெரிவித்தார்.
Comments