குமரி மீனவர்களுக்கு ஆதரவாக சென்னையிலும் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

ஒக்கி புயலில் சிக்கி மாயமான கன்னியாகுமரி மீனவர்களை மீட்க வலியுறுத்தி சென்னையிலும் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒக்கி புயலில் சிக்கி குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகி விட்டதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் காணாமல் போன குமரி மாவட்ட மீனவர்களை மீட்கக்கோரி சென்னையிலும் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை நொச்சிக்குப்பத்தில் நடைபெற இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து சென்னை சேப்பாக்கம் பகுதியில் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த போராட்டத்தில் 25 மீனவ கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டுள்ளனர். 

குமரி மாவட்ட மீனவர்களும் எங்களின் உறவினர்கள் தான் என தெரிவிக்கும் அவர்கள், மீனவர்களை கண்டுபிடிக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments