மீனவர்களை மீட்க மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம்

கன்னியாகுமரி, Kanyakumari, பேரணி,  rally, ரயில் மறியல்,  train sticks, மீனவர்கள்,  fishermen,குழித்துறை, kuzhithurai,  போலீஸ், police, குழித்துறை ரயில் நிலையம்,kuzhithurai railway station, மீனவ சங்கங்கள், fishermen associations,கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் மாயமான மீனவர்களை மீட்டுத்தரக் கோரி ரயில் மறியலில் ஈடுபடுவதற்காக 5000 மீனவர்கள் பேரணியாக சென்றனர். தொடர்ந்து அவர்கள் குழித்துறையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் போராட்டம் நீண்ட நேரமாக நடந்தது. இதனால், அந்த வழியாக இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் சேவை மாற்றிவிடப்பட்டன.

கன்னியாகுமரியில் ஒக்கி புயலால் மாயமான 1150 க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்டுத்தரக் கோரி 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் இரு பிரிவாக சென்று குழித்துறையில் ரயில் மறியலில் ஈடுபட உள்ளனர். ரயில் மறியலில் ஈடுபடுவதற்காக சுமார் 5000 பேர் பேரணியாக சென்றுள்ளனர். இவர்களை சின்னத்துறை பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தியதால், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
கடலில் தத்தளிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்டுத்தரக் கோரி மீனவ சங்கங்களைச் சேர்ந்த மக்கள் ஊர்வலமாக சென்றுள்ளனர். இதனால் பாதுகாப்பிற்காக 200 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குழித்துறை ரயில் நிலையத்திற்கு செல்வதற்காக சுமார் 8 கி.மீ., மீனவ மக்கள் பேரணியாக சென்றனர். தொடர்ந்து ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

Comments