இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி,Inspector periyapandi, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, நிதியுதவி ,Funded, ராஜஸ்தான் ,Rajasthan,  நகை கொள்ளை,jewelry robbery, மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி,maduravail inspector periyapandi, கல்விச் செலவு, Education expenses,நிவாரணம்,  relief,காவலர்கள்,police, முனிசேகர்,munizarer,  எம்புரோஸ்,embros,  சுதர்சன், sudarshan, குருமூர்த்தி,gurumurthi,சென்னை: ராஜஸ்தானில், நகை கொள்ளையர்களை பிடிக்க சென்ற மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி கொள்ளையர்கள் சுட்டதில் உயிரிழந்தார். மேலும் 4 தமிழக போலீசார் காயமடைந்தனர். இவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜஸ்தானில் கொள்ளயைர்கள் சுட்டதில் உயிரிழந்த பெரியபாண்டியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்த காவலர்கள் முனிசேகர், எம்புரோஸ், சுதர்சன், குருமூர்த்தி ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும். உயிரிழந்த பெரியபாண்டியின் 2 மகன்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும். காயமடைந்த காவலர்களின் மருத்துவ செலவையும் அரசே ஏற்கும். 

போலீசாரை தாக்கிய கொள்ளயைர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். நகை கொள்ளை, போலீசாரை தாக்கிய கொள்ளையர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Comments