ஆர்.கே.நகர் தேர்தலில், பா.ஜ., போட்டியிடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நேற்று சென்னை, பா.ஜ., அலுவலகத்தில் நடந்தது.கூட்டம் முடிந்த பின், தமிழிசை கூறியதாவது: ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதா, வேண்டாமா என்பதை, மேலிடம் முடிவு செய்யும். ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு, கட்சி மேலிடத்திற்கு தெரிவிக்கப்படும். மத்திய கமிட்டி கூடி ஆலோசித்து, முடிவை அறிவிக்கும்.
இதில், உடனடியாக முடிவெடுக்க வேண்டிய அவசரம் இல்லை; தீர ஆலோசித்து முடிவெடுக்கலாம். போட்டியிடுவதாக இருந்தால், நட்சத்திர வேட்பாளரை நிறுத்துவோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா, வேண்டாமா என பா.ஜ., கட்சி குழப்பமடைந்துள்ளதாக தெரிகிறது.
Comments