இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது ஏன்? தேர்தல் கமிஷன் தீர்ப்பு விவரம்

தேர்தல் கமிஷன் தீர்ப்பு, Election Commission Judgment, இரட்டைஇலை,  irattai ilai, மதுசூதனன்,Madhusudhan,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  Chief Minister Edappadi Palanisamy, பெரும்பான்மை ,Majority, தினகரன், Dinakaran, தீபா ,  Deepa, அ.தி.மு.க, AIADMK, தேர்தல் கமிஷன்,Election Commission,புதுடில்லி: அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையிலான முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் கமிஷன் அளித்த 83 பக்க தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பெரும்பான்மை உறுப்பினர்கள் அளித்த ஆதரவின்படி இந்த முடிவு எடுக்கப்படுகிறது.

இது தொடர்பான விவரம் வருமாறு

* மொத்தம் 2128 பொதுக்குழு உறுப்பினர்களில் , 1,741 பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த பிரமாணப்பத்திரம் ஏற்கப்பட்டது.

* தினகரன் தரப்பில் தாக்கலான 1280 , பிரமாணப்பத்திரங்களில் 168 பத்திரங்கள் மட்டுமே ஏற்கப்பட்டது. 

* கட்சியின் பொதுக்குழுவே தொண்டர்களின் பிரதிபலிப்பாக கொள்ள முடியும். 

* தினகரன் அணிக்கு 20 , பழனிசாமிக்கு 111 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவாக உள்ளனர். 

* அமைப்பு ரீதியாகவும், சட்டப்பேரவையிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவு உள்ளது. 

* லோக்சபாவில் 34 எம்.பி.,க்களும், தினகரன் அணிக்கு 3 எம்.பி.,க்களும் ஆதரவாக உள்ளனர்.

* ராஜ்யசபாவில் முதல்வர் அணிக்கு 8 எம்.பி.,க்களும், தினகரன் அணிக்கு 3 எம்.பி.,க்களும், ஆதரவாக உள்ளனர்.

* மார்ச் 22 ம் தேதி இரட்டை இலையை முடக்கிய கமிஷன் உத்தரவு வாபஸ்

* அ.தி.மு.க., என்ற பெயரை அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையிலான அணியினர் பயன்படுத்தலாம்.

* அ.தி.மு.க., கட்சி , கொடி, அலுவலகம் அனைத்தும் பழனிசாமி தரப்பினருக்கே சொந்தம்.

* அதிமுகவில் உறுப்பினராக கூட இல்லாத தீபா உரிமை கோர முடியாது

* ஐக்கிய ஜனதாதளம், சமாஜ்வாடி கட்சி குழப்பத்தின் போது எடுக்கப்பட்ட முடிவே இப்போதும் எடுக்கப்படுகிறது. 

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Comments