
சென்னை: முதல்வர் மீது நம்பிக்கையில்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்தனர். இதன் பின்னர் கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பை கிளம்பினார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் புதுச்சேரி தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றியுள்ளது. இந்த சூழ்நிலையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் நாளை (ஆகஸ்ட் 26) மாலை மும்பையிலிருந்து சென்னை வர உள்ளாதாக கூறப்படுகிறது.
Comments