
சிர்சா: பலாத்கார வழக்கில் தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து அரியானாவில் கலவரம் வெடித்துள்ளது. பாதுகாப்பு பணியில் ராணுவம், துணை ராணுவம் ஈடுபட்டுள்ளன. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் 144 தடை உத்தரவு நிலவுகிறது. சிர்சா மாவட்டத்தில் குர்மீத் ராம் ரஹீமின் தலைமை ஆசிரமம் உள்ளது. அங்கு லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் குழுமியுள்ளனர். அவர்களை வெளியேற்றுவதற்காக ராணுவ வீரர்கள் அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்தனர். துணை ராணுவ படை வீரர்களும், அதி விரைவுப்படை போலீசாரும் ஆசிரமத்திற்குள் சென்றுள்ளனர்.
Comments