சென்னை: மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் தமிழக அரசு உரிய நேரத்தில் முடிவெடுக்காமல் மாணவர்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என நாமக்கல்லை சேர்ந்த கிருத்திகா என்ற மாணவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த அவர், வெளியிடப்பட்ட மருத்துவ மாணவர் தரவரிசை பட்டியல் அடிப்படையில் யார் யாருக்கு எவ்வளவு இடம் கிடைக்கும். சிபிஎஸ்இ, மாநில பாட திட்ட மாணவர்களின் விவரத்தை தனித்தனியாக பிற்பகல் 2.15 மணிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
Comments