மும்பையிலிருந்து டிடிவி தினகரன் பெங்களூருக்கு சென்றார். அங்கு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசினார். அவருடன் எம்எல்ஏ-க்கள் தங்கதமிழ் செல்வன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். ஓபிஎஸ் தலைமையில் எழுபர் குழு அமைக்கப்பட்டுள்ளதால் அது பொதுச் செயலாளர் பதவியைக் காட்டிலும் பெரிய பதவி என்று கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சசிகலாவை சந்தித்து விட்டு வெளியே வந்த தினகரன் கூறும்போது, அதிமுக அணிகள் இணைப்புக்காக நான் 60 நாள்கள் விலகி இருக்கிறேன். அதிமுகவின் இரு அணிகளை நிச்சயம் இணைக்க முடியும். பாஜக ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத்துக்கு ஆதரவு தருமாறு யாரும் நெருக்கடி கொடுக்கவில்லை. எனக்கும் திவாகரனுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று தினகரன் தெரிவித்தார்.
Comments