உண்மையை வெளிப்படுத்தியதால் அதிகாரிகள் தொந்தரவு: டிஐஜி ரூபா

சசிகலா, ரூபா, பெங்களூரு சிறை, தொந்தரவுபெங்களூரு: சசிகலாவுக்கு சலுகை வழங்குவது குறித்து, உண்மையை வெளிப்படுத்தியதால், உயர் அதிகாரிகள் தொந்தரவு கொடுப்பதாக பெங்களூரு சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: சசிகலாவுக்கு சிறையில் சலுகை அளிப்பது குறித்த அறிக்கையில் நான் உறுதியாக உள்ளேன். இந்த விவகாரத்தில் என்னை குறிவைப்பதில் எந்த நியாயமும் இல்லை. சசிகலாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறுவதால் எனக்கு எந்த லாபமும் இல்லை. என் மீது தவறு இருந்தால் விசாரணைக்கு தயாராக உள்ளேன். எந்த நடவடிக்கைக்கும் தயார். டிஜிபிக்கு அளித்த புகார் குறித்து மீடியாக்களிடம் பேசவில்லை. நிருபர்களை சந்தித்ததால் நடவடிக்கை எடுத்தாலும் எனக்கு கவலை இல்லை. சசி அறையில் இருந்த டிவி, மின்விசிறி இருந்த படக்காட்சிகள் பற்றி எனக்கு தெரியாது. உண்மையை வெளிப்படுத்தியதால் உயர் அதிகாரிகள் எனக்கு தொந்தரவு கொடுக்கின்றனர். இவ்வாறு ரூபா கூறினார்.

Comments