அரசு அனுமதியுடன் விடுப்பு எடுத்திருந்தேன். மீண்டும் பணிக்கு வந்த போது, விதிமுறை மீறலை கண்டுபிடித்தேன். நான் அலுவலக நேரத்தில் தான் புகார் கடிதத்தை அனுப்பினேன். இந்த விஷயத்தில் பல்வேறு ஆதாரங்களுடன் கடிதத்தை அனுப்பியுள்ளேன். சிறையில் விசாரணை மேற்கொண்டால்உண்மை வெளி வரும்.
புகார்களை சம்பந்தப்பட்ட துறையின் தலைவருக்கே அனுப்பியுள்ளேன். அவரது துறையில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளேன். நான் சிறைக்கு சென்று ஆய்வு செய்த பின்னரே அறிக்கை அனுப்பியுள்ளேன்.
இதில், வதந்தி எது, உண்மை எது என குறிப்பிட்டுளேன். பாரபட்சமற்ற விசாரணை நடத்தினால், பல உண்மைகள் வெளிவரும். இவ்வாறு அவர் கூறினார்.
விசாரணைக்கு தயார்:
முன்னதாக சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணா அளித்த பேட்டி: சிறையில் சசிகலாவுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. தனி சமையல் அறையும் அளிக்கப்படவில்லை. ரூ. 2 கோடி லஞ்ச புகார் வெறும் வதந்தி. புகாருக்கு ஆதாரம் இல்லை. டி.ஐ.ஜி., ரூபா எந்த விதிகளும் தெரியாமல் செயல்படுகிறார். சிறையில் சாதாரண அறையில்தான் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். விதிகளுக்கு உட்பட்டு தான் தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் சசிகலாவை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர். எந்த விசாரணையையும் சந்திக்க நான் தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
Comments