இது தொடர்பாக ஐ.நா., பொது செயலரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபனே டுஜாரிக் கூறியதாவது: இந்தியா - பாகிஸ்தானுக்கான ஐ.நா., கண்காணிப்பாளர்கள் வாகனத்தில் சென்ற போது, துப்பாக்கிச்சூடு சத்தத்தை கேட்டனர். ஆனால் அவர்கள் சென்ற வாகனம் குறி வைத்து தாக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை. இதில் ஐ.நா., பார்வையாளர்கள் யாரும் காயமடையவில்லை. காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை கவலையளிக்கிறது. அங்கு நிலவும் சூழ்நிலையை பொது செயலர் தீவிரமாக கண்காணித்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
Comments