அடமான சொத்துக்களை விற்க நடிகை ராதிகாவுக்கு சென்னை ஹைகோரட் அதிரடி தடை

chennai high court ban on to sell Raadhika Sarathkumar's property சென்னை: ரூ2.5 கோடி கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்களை விற்க நடிகை ராதிகா சரக்குமாருக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராடியன்ஸ் மீடியா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வருண் மணியன் என்பவர் 'ராடியன்ஸ் மீடியா' என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் பாம்பு சட்டை என்ற படத்தை தயாரிக்க சரத்குமார், ராதிகா பங்குதாரர்களாக உள்ள மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒன்றரை கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தனர்.

இந்த பணத்தை 2015 மார்ச் மாதத்திற்குள் திருப்பி தருவதாக உறுதி அளித்திருந்தனர். பணத்தை கொடுக்காத பட்சத்தில் 'டிவி' சேனல்களுக்கு விற்பது உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் ரேடியனஸ் மீடியாவுக்கே உரியது என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடுதலாக ஒரு கோடி ரூபாய் கடன் கேட்டு தியாகராயநகர் மற்றும் திருநெல்வேலியில் உள்ள சொத்துக்களை அடமானமாக கொடுத்திருந்தனர். ஆனால் ஒப்பந்தத்தை மீறி படத்தை ரிலீஸ் செய்துவிட்டனர். தங்களுக்கு தர வேண்டிய இரண்டரை கோடி ரூபாயை வட்டியுடன் சேர்த்து தர உத்தரவிட கோரியும் அடமானமாக வைத்த சொத்துக்களை விற்க தடை விதிக்க கோரியும் ராடியன்ஸ் மீடியா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடிகை ராதிகா அடமானம் வைத்த சென்னை, நெல்லையில் உள்ள சொத்துக்களை விற்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் நீதிமன்றத்தில் பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments